நாடாளுமன்றில் ஜீவன் எம்.பிக்காக முழக்கமிட்ட இராமநாதன் அர்ச்சுனா!
மலையக மக்களுக்காக ஒரு நிமிடத்தையேனும் ஒதுக்க முடியாவிட்டால் எதற்கு இந்த சபையும் ஆளும் கட்சியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.
மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் பேசுவதற்கு நாடாளுமன்றில் நேரம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி
இதனடிப்படையில் மலையக மக்களுக்காக ஒரு நிமிடத்தையேனும் ஒதுக்க முடியாவிட்டால் இந்த சபையும் ஆளும் கட்சியும் எதற்கு என அவர் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து உரையாற்றிய ஜீவன் தொண்டமான், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே இவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பதாகப் பாதுகாப்புத் தரப்பு உறுதியளித்திருந்த போதிலும் அவை தொடர்ந்து நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கடந்த 48 மணிநேரத்திற்குள் மேலும் இருவர் தாக்கப்பட்டுள்ளதாக அவர் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |