ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்!!
Colombo
Galle Face Protest
Kumara Welgama
Sri Lankan political crisis
Galle Face Riots
By Kanna
முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம ஹோமாகம வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
72 வயதான குமார வெல்கம நேற்று மகும்புராவில் ஆர்ப்பாட்டக்கார கும்பலால் தாக்கப்பட்டார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, குமார வெல்கம தாக்குதலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
கிழிந்த ஆடையுடனும் பல காயங்களுடனும் மருத்துவமனைக்கு வந்த குமார வெல்கம தற்போது அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஹோமாகம வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 4 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
5 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்