சிறிலங்கா படையினரின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மாவீரர் நாளுக்கான தயார் நிலை!
Mullaitivu
Maaveerar Naal
Maaveerar Naal 2022
By Kalaimathy
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளுக்கான ஒழுங்கமைப்புக்களில் பணிக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி , மாவீரர் நாள் நிலைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுகளுக்கான ஆயத்தங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், தேராவில் துயிலும் இல்லத்திலும் ஏற்பாட்டு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
தடைகளைத் தாண்டிய நினைவேந்தல்
தாயகப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தலின் போதும் சிறிலங்கா படையினர் தடைவிதித்து வந்தனர்.
அதேபோன்று இவ்வருடமும் சிறிலங்கா படையினர், காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்களின் பல்வேறு தடைகள் அச்சுறுத்தல்கள் என்பவற்றிற்கு மத்தியில் மண்மீட்புப் போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக உணர்வெழுச்சி நினைவேந்தல் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.