மட்டக்களப்பில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
Batticaloa
Mullivaikal Remembrance Day
Eastern Province
By Sathangani
தமிழினப் படுகொலையில் 16ஆம் ஆண்டு நினைவு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் (Batticaloa) அனுஷ்டிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு - காந்தி பூங்காவில் இன்று (18) காலை குறித்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.
நினைவேந்தல் நிகழ்வின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்காக சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் பரிமாறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்