மலேசியாவிற்கு தப்பி செல்ல முயன்ற சந்தேக நபர் கட்டுநாயக்காவில் கைது
மலேசியாவிற்கு (Malaysia) தப்பி செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 11 ஆம் திகதி பாணந்துறை காவல் பிரிவில் உள்ள ஹிரான பகுதியில் ஹசித துலாஜ் என்ற நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரான ரமேஷ் பேஷல என்ற 28 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற விசாரணை
குறித்த நபர், இன்று (22) காலை 10:40 மணிக்கு மலேசியாவுக்குப் புறப்படவிருந்த ஏர் ஏசியா விமானம் AK-44 இல் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, பாணந்துறை காவல் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு, சந்தேக நபரை அங்கிருந்த அழைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
