யாழ். வட்டுக்கோட்டையை உலுக்கிய பெரும் கலவரம்! அதிகாலையில் சுற்றிவளைப்பு - மூவர் கைது
யாழ் (Jaffna) வட்டுக்கோட்டை - மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், உதவிப் காவல்துறை அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை அழைத்து விரைந்து கைது நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
அந்தவகையில் மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த இருவரும், சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவர், நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரையிலான சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மேலும், மூளாய் பகுதியில் தொடர்ந்தும் காவல்துறை பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலவரத்தை அடக்குவதற்கு காவல்துறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
