கொக்குவில் படுகொலை: யாழில் அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தல்!
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50 பொதுமக்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (24.10.2025) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்த சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் இந்திய ஆக்கிரமிப்பு படை தாக்குதலை மேற்கொண்டது.
குறித்த தாக்குதல் கொக்குவில் இந்து கல்லூரி வெளி வாசலில் இடம்பெற்றது.
அகவணக்கம்
இதனை கொக்குவில் படுகொலை நினைவேந்தர் குழு ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, பொதுசுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் மற்றும் 22, 23,23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை, கொக்குவில் பிரம்படி கோண்டாவில், கொக்குவில் இந்து கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் இந்திய இராணுவம் பொதுமக்களை படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


