திருகோணமலையில் பரிதாபமாக பலியான பெண் குழந்தை
திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
மூதூர், ஷாபி நகர் பகுதியில் நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த ஒரு வயது எட்டு மாதங்கள் மதிக்கத்தக்க ஆலியா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
பாதுகாவலர்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டின் அருகே தேங்கியிருந்த அல்லது தோண்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய பள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் நடந்த உடனேயே குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் மழையினால் குடியிருப்புப் பகுதிகளில் நீர் நிலைகள் மற்றும் பள்ளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
எனவே, சிறு பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள், குழந்தைகளை ஒரு நிமிடம் கூடத் தனியாக விடாமல் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |