மியன்மாரை சிதைத்த நிலநடுக்கம்..! குவியல் குவியலாக மீட்க்கப்படும் உடல்கள்

Myanmar Earthquake World
By Thulsi Apr 04, 2025 02:53 AM GMT
Report

புதிய இணைப்பு

மியன்மாரை கடந்த வெள்ளிக்கிழமை ரிச்டர் அளவில் 7.7 ஆக உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளது.

458 பேர் காயம் அடைந்துள்ளனர். 221 பேர் மாயமாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

முதலாம் இணைப்பு

மியன்மாரில் (Myanmar) கடந்த 28 திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

மியன்மாரை சிதைத்த நிலநடுக்கம்..! குவியல் குவியலாக மீட்க்கப்படும் உடல்கள் | Myanmar Earthquake Death Toll

கட்டட இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை, கர்ப்பிணி பெண் உட்பட 4 பேரை 60 மணி நேரத்துக்கு பிறகு சீன (China) மீட்புப் பணியாளர்கள் குழு மீட்டது. அத்துடன் ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து 26 வயதுடைய ஒருவரை உயிருடன் மீட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கத்தின் போது இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் சிக்கிய குடும்பத்தினரின் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அதிரும் ஆசியக்கண்டம் - அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம்

அதிரும் ஆசியக்கண்டம் - அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம்

இடிந்த கட்டிடத்தின் சரிவில் சிக்கி

இந்த காணொளியில், 13 மற்றும் 16 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், காயமடைந்த அவர்களின் பாட்டியும் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் காணொளி காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.

இவர்கள் நிலநடுக்க அதிர்வுகளின் போது அவசரப் படிக்கட்டுகளுக்கு விரைந்த போது, திடீரென இடிந்த கட்டிடத்தின் சரிவில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இடிபாடுகளை அகற்றி அவர்களை மீட்க கூடுதல் உபகரணங்கள் தேவைப்படும் நிலையில், அதிகாரிகள் அவர்களை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

புடினின் தொடர் அச்சுறுத்தல்: களத்தில் இறங்கிய மற்றுமொரு நாடு

புடினின் தொடர் அச்சுறுத்தல்: களத்தில் இறங்கிய மற்றுமொரு நாடு

மியன்மாரின் இராணுவ அரசாங்கம்

நிலநடுக்க பாதிப்புக்கள் காரணமாக உயிரிழந்த 3,000 பேரது உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இது தவிர 4,500 போ் காயமடைந்துள்ளதோடு 441 பேரைக் காணவில்லை எனவும், காணாமல் போனவர்களில், பெரும்பாலானோர் இறந்திருக்கக் கூடும். அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

மியன்மாரை சிதைத்த நிலநடுக்கம்..! குவியல் குவியலாக மீட்க்கப்படும் உடல்கள் | Myanmar Earthquake Death Toll

இந்த நிலையில் மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது .

இதில் பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கனரக இயந்திரங்கள் இல்லாததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மியன்மாரில் நிலநடுக்கத்தால் நீர் விநியோகம், சுகாதார உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

நோய்கள் பரவும் அபாயம்

இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மியன்மாரை சிதைத்த நிலநடுக்கம்..! குவியல் குவியலாக மீட்க்கப்படும் உடல்கள் | Myanmar Earthquake Death Toll

சுவாசத் தொற்றுகள், தோல் நோய்கள், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்க் கிருமிகளால் பரவும் நோய்கள், தட்டம்மை போன்ற தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கான பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   

இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு அரிய வாய்ப்பு

இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு அரிய வாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020