அமெரிக்காவில் கூட்டமாக பறக்கும் மர்ம ட்ரோன்களால் பரபரப்பு : முக்கிய தலைகளுக்கு குறி...!
ஈரான் மற்றும் அண்டை நாடுகளுடனான போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் மார்கோ ரூபியோ, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரின் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம ட்ரோன்கள் வட்டமிட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் பாதுகாப்பு நிறைந்த வோஷிங்டன் அமெரிக்க இராணுவ தளத்தின் வளாகத்தில் இவர்களின் வீடுகள் அமைந்துள்ளன.
மிகக்குறைந்த உயரத்தில் பறந்த 20 ட்ரோன்கள்
இந்நிலையில் சுமார் 20 ட்ரோன்கள் கூட்டமாக இணைந்து, மிகக் குறைந்த உயரத்தில் பறப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். வர்ஜீனியாவில் உள்ள லாங்லி விமானப்படை தளம் போன்ற அதீத பாதுகாப்பு நிறைந்த இராணுவ மையங்களிலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ட்ரோன்கள் பறந்து வருகின்றன.

இந்தச் சம்பவங்கள் குறித்து எப்.பி.ஐ மற்றும் பென்டகன் உயர்மட்ட விசாரணையை தொடங்கியுள்ளன.
ஈரான் ட்ரோன்களை ஏவியிருக்கலாம்
ஈரானுடனான மோதல் உச்சத்தில் இருப்பதால், அமெரிக்கத் தலைவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஈரான் ட்ரோன்களை ஏவியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

மத்திய கிழக்கில் 7,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவிற்குள்ளேயே மர்ம ட்ரோன்கள் பறப்பை மேற்கொண்டள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You may like this..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |