யாழ்ப்பாணம் ஆழியவளையில் மணலில் புதைந்துள்ள மர்மப் பொருளால் பரரப்பு
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு ஆழியவளைப் பகுதியில் இனந்தெரியாத மர்மப் பொருள் ஒன்று மணலில் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆழியவளைப் பகுதியில் கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதியில், மணலுக்குள் ஓரளவு புதைந்த நிலையில் இந்த மர்மப் பொருள் காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்புத் தரப்பினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
வெடிக்கும் தன்மை கொண்ட ஒன்றாக இருக்கலாம்
சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புத் தரப்பினர், முதற்கட்ட சோதனைகளை மேற்கொண்டனர். எனினும் கண்டெடுக்கப்பட்ட பொருள் வெடிக்கும் தன்மை கொண்ட ஒன்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அப்பொருள் எவ்வகையைச் சார்ந்தது என்பதனை இதுவரை உறுதியாக இனம் காண முடியவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 8 மணி நேரம் முன்