மாணவிகளின் தலைமுடியை வெட்டும் மர்ம நபர் கைது
பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டும் நபர் ஒருவர் பண்டாரவளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இச் சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளதுடன் அந்த பகுதி வாழ் பாடசாலை மாணவிகள் மத்தியில் கடந்த சில காலமாக அச்சம் நிலவி வந்துள்ளது.
ஊவ-பரணகம பகுதியைச் சேர்ந்த 33 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளையிலிருந்து ஹீல்ஓய வரை பயணித்த பேருந்து ஒன்றில் இருந்த மாணவி ஒருவரின் தலைமுடியை வெட்ட முயற்சித்துள்ள வேளையில் பேருந்தில் பயணித்தவர்கள், குறித்த சந்தேகநபரை பிடித்து பண்டாரவளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபர் வசமிருந்த பயணப் பையிலிருந்து, பாடசாலை மாணவிகளுடையது என சந்தேகிக்கப்படும் தலைமுடி, கத்தரிக்கோள் உள்ளிட்ட சில பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.