விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் வைத்தியர் - நீண்ட நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலம்
கொழும்பு - தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் குருதி பரிமாற்ற பிரிவில் சேவையாற்றி வரும் 35 வயதுடைய வைத்தியரே இவ்வாறு மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம்
குறித்த வைத்தியர் சேவைக்கு சமுகமளிக்காததால் சிற்றூழியர்கள் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று பார்த்த போது, அவர் உயிரிழந்து கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த வைத்தியரின் மனைவி வேறு வைத்தியசாலையில் பல் வைத்தியராக கடமையாற்றுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வைத்தியர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
