சுட்டு கொல்லப்பட்ட தமிழர் : வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு - அவிழ்க்கப்படாத முடிச்சுகள்
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் கடந்த 21 ஆம் திகதி தலவாக்கலையை சேர்ந்த சசிகுமார் என்பவர் சுட்டுகொல்லப்பட்டார்.
இதையடுத்து, துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற இரு துப்பாக்கிதாரிகளை கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து அவர் கிரான்பாஸ் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட காவல்துறையினர் துப்பாக்கிதாரிகளை அழைத்துச் சென்றபோது, துப்பாக்கிதாரிகள் காவல்துறையினரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுட முயன்ற போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் மரணம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala), பிரதி காவல்துறை மா அதிபரிடம் அறிக்கை கோரியிரந்தார்.
இந்த சம்பவம் குறித்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு பதில் காவல் துறை மா அதிபரிடம் அறிவுருத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், வெளிநாட்டில் இருக்கும் ஒருவரின் உத்தரிவின் கீழ் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்தநிலையில், சசிகுமார் படுகொலை, , குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணி, துப்பாக்கிதாரிகளை காவல்துறையினர் படுகொலை செய்தமைக்கான காரணம் மற்றும் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்