வெலிக்கடை சிறையில் மீட்கப்பட்ட மர்மப்பொதி - ஆரம்பிக்கப்பட்ட விசாரணை
Police
Prison
SriLanka
Weligada
By Chanakyan
வெலிகடை சிறைச்சாலையின் மதில் சுவரில் இருந்து சிறைச்சாலைக்குள் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட பொதியிலிருந்து கைத்தொலைபேசி, இரண்டு சிம் அட்டைகள் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக மீட்கப்பட்ட பொதியினை பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.