“சொந்த மக்களையே காக்கை, குருவியை சுடுவது போல கொலை செய்த இந்திய இராணுவம்”!.. சீமான் வெளியிட்டுள்ள கண்டனம்
இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என தவறாக கருதி பாதுகாப்பு படையினர் சொந்த நாட்டு மக்களையே கொன்ற சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய - நாகலாந்து மாநிலத்தில் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் பொதுமக்களை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பலரும் கவலையும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் காட்டமாக ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்திய இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. இது மக்களுக்கான நாடா? அல்லது சுடுகாடா? என உளச்சீற்றம் ஏற்படுகிறது.
சொந்த மக்களையே காக்கை, குருவியை சுடுவது போல கொலை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.