நல்லூரின் கொடிச்சீலைக்குப் பின்னால் இப்படியும் ஒரு வரலாறா...

Jaffna Nallur Kandaswamy Kovil Srilankan Tamil News
By Kathirpriya Aug 21, 2023 12:28 PM GMT
Kathirpriya

Kathirpriya

in வரலாறு
Report

உலகெங்கிலும் பரந்து வாழும் பக்தர்களால் மிகுந்த பக்தி சிரத்தையோடு வழிபடப்பட்டு வருகின்ற வரலாற்று தொன்மை மிக்க தலங்களுள் மிக முக்கியமானதொன்றாக நல்லூர் கந்தசுவாமி ஆலயம் விளங்குகின்றது.

ஆலயத்தின் மரபுவழி பாரம்பரியங்களைஅன்று தொட்டு இன்று வரை மாறாமல் பேணுவது ஆலயத்திற்கே உரிய தனித்துவ பண்பேன்றே கூற வேண்டும்.

கலியுக வரதனான கந்தப்பெருமானை நம் சொந்தப்பெருமான் என்று அழைத்து உரிமையோடு தமிழர் தம் வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இத்தகைய சிறப்புகள் நிறைந்த முருக வழிபாட்டிலே பல்வேறு சிறப்பம்சங்கள் பொருந்தியதாக இருக்கக்கூடிய நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஒவ்வொரு நாள் உற்சவமும் தனித்துவமானவை எனவே கூற வேண்டும்.

அலங்காரங்களுக்குப் பெயர் போன நல்லைக் கந்தன் அலங்காரக் கந்தனாக எழுந்தருளி அருள்பாலிக்கும் அற்புத தருணங்களை மகோற்சவ காலங்களில் காணலாம்.

செங்குந்தர் என்ற வம்சத்தினர்

நல்லூரின் கொடிச்சீலைக்குப் பின்னால் இப்படியும் ஒரு வரலாறா... | Nallur Annual Festival Starts Tomorrow

நல்லைக்கந்தன் ஆலய கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிறு வழங்கும் நடைமுறையினை செங்குந்தர் என்ற வம்சத்தினராலேயே காலாகாலமாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

முருகப்பெருமானை தமது குலதெய்வமாகக் கொண்ட செங்குந்தர் மரபினைச் சேர்ந்தவர்கள் தமது பரம்பரை விருத்தியடைய வேண்டி முருகப்பெருமானிடம் நேர்த்தி வைத்ததாகவும், நேர்த்திக் கடனைத் தீர்க்கும் பொருட்டு கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலையை வழங்கி வைத்ததாகவும், அதுவே பின்னாளில் மரபாக உருவானதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த மரபு தொன்று தொட்டு இன்று வரை சிரத்தையோடு கடைப்பிடிக்கப்பட்டு வருவது சிறப்பம்சமே. நல்லை கந்தன் ஆலய மகோற்சவத்தை ஒட்டி ஒவ்வொரு வருடமும் 24 முழம் நீளம் கொண்ட புதுக் கொடிச்சீலையில் வேலும், மயிலும் வரையப்பட்டு கொடுச்சீலையும் தயார் செய்யப்படுகிறது.

அதேபோன்று 24 முழம் கொண்ட கொடிக்கயிறும் தயார் செய்யப்படுகின்றது .

குறிப்பாக செங்குந்தர் பரம்பரையினரின் மிக முக்கியமான பாரம்பரிய தொழிலாக நெசவுத் தொழில் காணப்படுவதால், அவர்களே கொடிச்சீலையை நெய்து நல்லூர்க் கந்தனுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நெசவுத் தொழில் புழக்கத்தில் இல்லாத காரணத்தால், புதிய துணி வாங்கி அதில் வேலும், மயிலும் வரையப்பட்டு வழங்கப்படும் வழக்கம் தொடருகின்றதாகவும் கூறப்படுகிறது

முருகப்பெருமானுக்கு கொடிக்கயிறு மற்றும் கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர்கள் யாரென்று ஆராய முற்படுகின்றபோது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழ்ந்து வந்த ஓர் இனமாக செங்குந்தர் எனும் கைக்கோளர் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி பொருந்திய வேலை உடையவர் என்று பொருள் கொள்ளப்படுகிறது அதேநேரம் ஆரம்ப காலங்களில் போர்களின் போது அரசர்களின் பாதுகாப்பிற்காக ஈட்டி பொருந்திய வேலை சுழற்றுபவர்கள் என்பதனால், இவர்கள் கைக்கோளர் எனவும் அழைக்கப்பட்டு வந்தனர்.

செங்குந்தர்களைப்பொறுத்தவரை ஈட்டி மட்டுமல்லாது வாளும் பிடித்து போரிடக் கூடிய வல்லமை பொருந்தியவர்களாயிருந்தனர் அதன் காரணமாகவே மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய படை வீரர்களாக பணியாற்றியுள்ளனர் என்பது வரலாறு.

இவர்கள் குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்தவர்களாதலால் முருகனை தமது குலதெய்வமாக கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் முருகன் தோன்றம் பற்றி கூறப்படுகின்ற கதைகளில் பார்வதியின் காற்சிலம்பில் இருந்து தோன்றிய வீரவாகுத்தேவரின் வழி வந்த வழித்தோன்றல்களே செங்குந்தர்கள் என நம்பப்படுகின்ற இன்னொரு வரலாறும் அவர்களுக்கு உண்டு.

செங்குந்தர்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், ஆற்காடு, ஆரணி, காமக்கூர், தேவிகாபுரம், காஞ்சிபுரம், ஜெயங்கொண்டபுரம், திருமழபாடி, தஞ்சை, சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பரந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

முக்கிய தொழிலாக நெசவு

நல்லூரின் கொடிச்சீலைக்குப் பின்னால் இப்படியும் ஒரு வரலாறா... | Nallur Annual Festival Starts Tomorrow

இவர்களின் முக்கிய தொழிலாக நெசவு இருந்தாலும், வணிகம் போன்ற பிற தொழில்களிலும் ஈடுபட்டுகின்றார்கள் வியாபார நோக்கில் இலங்கைக்கு வருகை தந்த செங்குந்தர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் இராசதானியை அண்மித்த பகுதிகளில் தமது வாழிடங்களை அமைத்துக்கொண்டார்கள்.

அவர்கள் இன்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்த பகுதிகளான, கல்வியங்காடு, மற்றும் வடமராட்சியில் கரவெட்டி பகுதியிலும் இவை தவிர மட்டக்களப்பின் ஆரையம்பதி, தாமரைக்கேணி,கோட்டைக்கல்லாறு போன்ற இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான வரலாற்றுப்பிண்ணணியினைக்கொண்ட செங்குந்தரகளே வழிவழியாக தமது முன்னோர்கள் கைக்கொண்ட நடைமுறைகளின் அடிப்படையில் இன்றும் தமது தொழும்புகளை மரபுவழி மாற்றமின்றி நல்லை கந்தனின் சந்நிதியில் செய்து வருகின்றார்கள்

அலங்காரக்கோலம் காட்டி அழகு கொண்ட முருகனின் அழகில் இப்படியான மரபுத்தொடர்ச்சியும் இருந்துகொண்டிருப்பதும் பெருமைக்குரிய விடயம் என்றே கூறலாம்.


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

04 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

02 Jun, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020