நாமல் ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ( Sri Lanka Podujana Peramuna) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கும் வைபவம் கொழும்பு நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பொறுப்பை ஒப்படைத்ததற்கு நன்றி
இந்த சவாலான நேரத்தில் என்னை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைத்த கட்சியின் அரசியல் குழு மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு நான் குறிப்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
சவால்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். சவால்கள் இருக்கும்போதுதான் இளைஞர்கள் தலைமைக்கு தேவைப்படுகிறார்கள். நாங்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் எங்கள் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். இந்நாட்டு இளைஞர்கள் எதிர்பார்க்கும் நவீன சந்ததியினரின் அரசியல் நனவாகும் என நம்புகிறோம்.
ரணிலுடன் இணைந்தவர்கள் மீண்டும் வரலாம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற வகையிலும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையிலும் எமது கட்சியில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கும் அனைவரையும் தங்களின் குறைகள மறந்து மீண்டும் எம்முடன் இணையுமாறு பணிவுடன் அழைக்கின்றேன்.
நிச்சயம் வெற்றி பெறுவோம். எனது வெற்றி கட்சியின் வெற்றி. கட்சியின் வெற்றி நாட்டின் வெற்றி. தேர்தல் ஒரு சவால். சவால்களை எதிர்கொள்ள இளைஞர்களாகிய நாங்கள் இங்கு இருக்கிறோம்.
எங்களது ஒப்பந்தம் கட்சி உறுப்பினர்களுடன் உள்ளது. கட்சி உறுப்பினர்களைப் பாதுகாத்து நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதன் மூலம் நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம்.
மொட்டு சேற்றிலிருந்து பூக்கும்
ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) பொதுஜன பெரமுனவை ஏமாற்றிவிட்டாரா என்ற கேள்விக்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச, தான் தனது கொள்கைகளை பின்பற்றுவதாகவும், மற்றவர்களின் கொள்கைகளை விமர்சிக்காமல் தன் கொள்கையை மக்கள் முன் வைப்பதாகவும் தெரிவித்தார்.
மொட்டில் இருந்து இதழ்களை அகற்ற முயற்சி செய்யலாம். மொட்டு சேற்றிலிருந்து பூக்கும். வலை ஒரு இடத்திலும், மேல் பகுதி வேறொரு இடத்திலும் இருந்தாலும், இவை இரண்டும் மக்களுக்கு நெருக்கமானவை.
தம்மிக்க பெரேராவின்(dhammika perera) மன மாற்றம் குறித்து அவரிடம் கேளுங்கள். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவேன்’ என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 5 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்