ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆராயும் குழுவில் ஷானி அபயசேகர : நாமல் அதிருப்தி

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Easter Attack Sri Lanka
By Sathangani Apr 24, 2025 11:19 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட காவல்துறை குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக ஷானி அபயசேகரவை (Shani Abeysekara) நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து நாமல் ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (x) தளத்தில் நேற்று (23) பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட காவல்துறை குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக ஷானி அபயசேகரவை நியமித்தமை கடும் கேள்விகளை எழுப்புகின்றது.

வாக்காளர் அட்டைகளுடன் சிக்கிய மாநகர சபை வேட்பாளர்

வாக்காளர் அட்டைகளுடன் சிக்கிய மாநகர சபை வேட்பாளர்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ஒருவரை - ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரை, சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட ஒருவரை இந்த குழுவின் முக்கிய பொறுப்பிற்கு நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது.

இது வெறுமனே நடைமுறை ரீதியாக தவறான நடவடிக்கை மாத்திரமல்ல, இது ஒவ்வொரு நெறிமுறை தரத்தையும் மீறுவதாகும், இது செயல்முறையின் நம்பகத்தன்மை மீது இருண்ட நிழலை போர்த்துகின்றது.

சட்டரீதியான முடிவுகள் நியாயமான விதத்தில் எடுக்கப்படுவது மாத்திரம் முக்கியமானதல்ல, நீதித்துறையின் மீது மக்களிற்கு நம்பிக்கை ஏற்படுதவற்கு அவ்வாறான முடிவுகள் வெளிப்படையானதாக நியாயமானதாக எடுக்கப்பட்டதாக மக்கள் உணர்வதும் அவசியம்.

கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்ற குற்றவாளிகள் : ஆதங்கத்தை வெளிப்படுத்திய மைத்திரி!

கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்ற குற்றவாளிகள் : ஆதங்கத்தை வெளிப்படுத்திய மைத்திரி!

குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர்

மக்களின் நம்பிக்கை ஏற்கனவே மிகவும் பலவீனமான நிலையில் உள்ள சூழலில் இவ்வாறான தீர்மானங்கள் சந்தேகம் மற்றும் ஏமாற்றத்தை ஆழப்படுத்தும்.

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆராயும் குழுவில் ஷானி அபயசேகர : நாமல் அதிருப்தி | Namal Concern Shani Appoint Easter Attacks Committ

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தருணத்தில் ஷானி அபயசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளில் முக்கியமானவராக காணப்பட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயும் காவல்துறை குழுவில் அவரையும் இணைத்திருப்பது, நியாயபூர்வமான கரிசனைகளை எழுப்புகின்றது.

அமெரிக்கா விடயத்தில் அநுரவின் தில்லுமுல்லு: சந்தேகம் வெளியிட்ட ரணில்!

அமெரிக்கா விடயத்தில் அநுரவின் தில்லுமுல்லு: சந்தேகம் வெளியிட்ட ரணில்!

பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி

குறிப்பாக அறிக்கையில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்போது ஷானி அபயசேகரவின் சமீபத்தைய அரசியல் அறிக்கைகள் இந்த விடயத்தை மேலும் குழப்பகரமானதாக்குகின்றது, அவரது பக்கச்சார்பினை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆராயும் குழுவில் ஷானி அபயசேகர : நாமல் அதிருப்தி | Namal Concern Shani Appoint Easter Attacks Committ

இந்த விசாரணையை மேற்பார்வை செய்யும் அதிகாரிக்கு அரசியல் தொடர்புகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் பொதுமக்களிற்கு எவ்வாறு நம்பிக்கை ஏற்படும். இது ஒரு கட்சி சார்ந்த விடயமல்ல, இது தார்மீக தெளிவு மற்றும் நிறுவன ஒருமைப்பாடு சார்ந்த விடயம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு வெளிப்படையான நம்பகமான நியாயமான செயன்முறை தேவை. அவ்வாறில்லையெனில் பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமல்ல பொறுப்புக்கூறல் என்ற கருத்திற்கே அநீதி இழைப்பதாக அமையும்“ என தெரிவித்துள்ளார்.

டேன் பிரியசாத் படுகொலையில் திருப்பம் : சிக்கிய முக்கிய புள்ளி

டேன் பிரியசாத் படுகொலையில் திருப்பம் : சிக்கிய முக்கிய புள்ளி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026