2026 இல் நாமலுக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி...!
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை நேற்று (18) மேல்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக நாமல் ராஜபக்ச மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதவான் நதி அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வழக்கில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான் வழக்கை பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
இது தொடர்பிலும், தற்போதை அரசியல் களம், அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும் நாட்டின் எதிர்கால அரசியல் என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்