விசாரணைகள் அரசியலாக்கப்படக் கூடாது! அரசாங்கத்திடம் நாமல் முன்வைத்த கோரிக்கை
தேசிய பாதுகாப்பு மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்பட வேண்டுமே தவிர, அரசியல் லாபங்களுக்காக அவை அரசியலாக்கப்படக் கூடாது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அதன்போது, தற்கொலை குண்டுதாரி ஒருவரின் தந்தை ஜே.வி.பி (JVP) கட்சியின் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்தோ அல்லது குண்டுதாரி ஒருவருக்காக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஒருவர், கடந்த தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தமை குறித்தோ நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எவரும் ஏன் பேசவில்லை என்று நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
முறையான விசாரணை
இந்த நிலையில், முறையான விசாரணைகளை நடத்துமாறு தாங்கள் கோருவதாகவும், ஆனால் இந்த விவகாரங்களை அரசியல் மேடை நாடகமாக மாற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச, பொருளாதாரக் கொலையாளிகள் பற்றி பேசுபவர்கள் அரசியல் கூற்றுக்களை முன்வைப்பதற்கு முன்னர் அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளை முழுமையாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு தொடர்ந்து கடுமையான பொருளாதார இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி வறுமையின் அளவு கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்