அனுராதபுர கூட்டத்தில் லிமினி ராஜபக்ச! நாமலின் ஊடகம் வெளிபடுத்திய தகவல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி குறித்து சமூக ஊடகங்களில் போலியான செய்தி ஒன்று பரவிவரவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாமலின் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அவரது மனைவி தயாராகி வருதாக சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முகநூல் கணக்கொன்றில், நாமல் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலிச்செய்திகள்
அதேவேளை, மற்றுமொரு முகநூல் பக்கத்தில் பரப்பப்பட்ட மற்றொரு பதிவில், நாமல் ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில், அவரது மனைவி லிமினி ராஜபக்ச செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் பொதுஜன பெரமுன அரசியல் மேடையில் கலந்துகொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், மற்றொரு செய்தி இணையத்தளம் வெளியிட்டதாகக் கூறப்படும் பதிவொன்றில், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவர்களான சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஜாதகங்களைப் போன்று மிகவும் சக்திவாய்ந்தது எனவும், அவரது அரசியல் பிரவேசம் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கருத்துக்களை போலிச்செய்திகள் என நாமல் ராஜபக்சவின் ஊடகம் நிராகரித்துள்ளது
மேலும்,இவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என அடையாளம் இட்டு அவரது ஊடகம் பகிர்ந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |