மட்டக்களப்பு இளைஞர்கள் தொடர்பில் நாமல் வெளியிட்ட செய்தி
மட்டக்களப்பு மாவட்டதிலும் சிறப்பான விளையாட்டு வீரர்கள் இருக்கின்றார்கள். சிறந்த கிரிக்கட், வீரர்கள் இருக்கின்றார்கள்.
எதிர்காலத்தில் இங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுக்களை பழக்கி, அவர்களை கொழும்பு அழைத்துச் செல்வதற்குரிய வழிமுறைகளை உருவாக்குவோம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் 1.5 நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்ட கோட்டைக்கல்லாறு கிழக்கு பொது விளையாட்டு மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் பல வீரர்களை கொழும்புக்கு அழைத்திருந்தோம். சிலர் கொழும்பில் இருக்க முடியாது என திரும்பி வந்து விட்டார்கள்.
எதிர்காலத்திலே இக்கிராமத்திலுள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுக்களைப் பழக்கி கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்குரிய வழிமுறைகளை உருவாக்குவோம்.
சிறந்த வீரர்கள் இங்கு இருக்கின்றார்கள். கடற்கரை விளையாட்டை இப்பிரதேசத்தில் அறிமுகப்படுத்தி பிரபல்யப்படுத்துவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.
எதிர்காலத்தில் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லக்கூடிய விளையாட்டுக்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர்களும் இணைந்திருப்பார்கள் என நான் நினைக்கின்றேன்.
இந்த சந்தர்ப்பத்தை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.



