நந்திக்கடலில் அமைக்கப்படவுள்ள புதிய பாலம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
2025 வரவுசெலவுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, முல்லைத்தீவு-பரந்தன் வீதியில் நந்திக்கடல் தடாகத்தின் குறுக்கே கட்டப்படவுள்ள புதிய பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வட்டுவாகலில் முன்மொழியப்பட்ட இடத்திற்கு நேற்று (22) விஜயம் செய்த அமைச்சர் ரத்நாயக்க, திட்டத்திற்கான கொள்முதல் செயல்முறைகள் நடந்து வருவதாகவும், அது முடிந்தவுடன் கட்டுமானப் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
பாலத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,900 மில்லியன் ஆகும், இதில் ரூ. 1,000 மில்லியன் 2025 வரவு செலவு திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய பாலத்தின் நோக்கம்
மோசமான சாலை நிலைமைகளால், குறிப்பாக பாதகமான வானிலையின் போது பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதே இந்த புதிய பாலம் கட்டப்படுவதன் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஆய்வுப் பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வீதி அபிவிருத்தி ஆணைய அதிகாரிகளும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்