நாரஹேன்பிட அடுக்குமாடி குடியிருப்பில் தீ: மீட்பு பணிகள் தீவிரம்!
நாரஹேன்பிட்ட - தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 13 தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ஸ்கைலிஃப்ட் வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
[LZLOHAG ]
மீட்பு பணிகள்
அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் நான்காவது மாடியில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதேவேளை, தீ விபத்தால் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தீ விபத்தைத் தொடர்ந்து வெளியேறும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்த ஸ்கைலிஃப்ட் வாகனங்களைப் பயன்படுத்தி தீயில் சிக்கியவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், தீ விபத்து காரணமாக ஒரு வீடு முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
மேலும் வீட்டில் சிக்கிய இரண்டு குழந்தைகள் மற்றும் பெண்ணொருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்