மோடிக்குரிய ஆவணத்தில் பிளவு!! முரண்நிலை குறித்து வெளிவந்த தகவல்
இந்தியப் பிரதமருக்கான ஆவண விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்ட காரணத்தால் அதில் இருந்து விலகி, தமிழ் தேசியக் கட்சிகளுக்கு சுதந்திரமாக செயற்பட தாம் இடமளித்து விட்டு, வெளியில் இருந்து அவதானித்து கொண்டிருக்கின்றோம் என்கிறார் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan).
தமிழ்தேசிய கட்சிகளுக்குள் ஏற்பட்ட முரண்நிலை குறித்து தெளிவுபடுத்தலை வெளியிட்ட அவர், ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வரலாறும் அதில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் யுத்தத்தை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியிருந்து. யுத்தம் முடிந்துவிட்டால் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதாக அவரகள் கூறினார்கள். அவ்வாறு சொல்லியும் எங்களுக்கு நியாயம் வழங்கப்பட வில்லை.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் 13ஐ முற்படுத்த தயராயாகவில்லை என்பதை வெளிப்படுத்தத் தான் இந்தியப் பிரதமருக்கான கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான இந்தச் செயற்பாட்டை நாங்கள் ஆரம்பித்தோம்.
ஆனால் அதன் கலந்துரையாடல்கள் நீண்டுபோய், பல தடவைகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்று பல ஆவணங்கள் பரிமாறப்பட்டு வட கிழக்கின் சமகால வரலாறு எல்லாம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் மலையக மக்களின் வரலாறும், முஸ்லிம் மக்களின் வரலாறும் அதில் முறையாக இணைத்துக்கொள்ளப்படுவதற்கு இடமளிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.