2025க்குள் நிலவில் கால் பதிக்கப் போகும் மனிதர்கள் - நாசாவின் முதல் சோதனை வெற்றி
நாசா
மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'ஆர்டெமிஸ்' திட்டத்தை நாசா துவங்கியுள்ளது.
2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பவது அந்த திட்டத்தின் இலக்காகும் எனவும் தெரிவித்துள்ளது.
இதில் முதல்படியாக, மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டது, இந்த திட்டம் 'ஆர்டெமிஸ்-1' என அழைக்கப்படுகிறது.
ஓரியன் விண்கலம்
இந்த நிலையில், கடந்த மாதம் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல்.எஸ். விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முதல் படியான 'ஆர்டெமிஸ்-1' திட்டத்தில் நாசா வெற்றிப் பெற்றுள்ளது.
ஓரியன் விண்கலத்தில் 16 கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.
சுமார் 9 மணி நேர பயணத்திற்கு பின், சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து ஓரியன் விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது.
நிலவுக்கு செல்லும் விண்கலம்
1972-ம் ஆண்டுக்கு பின், நிலவுக்கு செல்லும் விண்கலம் ஒன்று பூமியை புகைப்படம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து டிசம்பர் 11-ம் தேதி ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பவுள்ளது என நாசா அறிவித்துள்ளது. ஓரியான் மீண்டும் பூமியை நோக்கி திரும்பி வருகிறது.
முன்னதாக, திங்கள் கிழமையன்று நிலவின் மேற்பரப்பில் இருந்து 130 கி.மீ தொலைவில் மிக நெருக்கமாக இது பறந்துள்ளது.