சீனாவைத் தொடர்ந்து! உலக நாடுகளை மிரட்டும் இந்தியா
இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இங்கிலாந்தில் பரவியுள்ள டெல்டா என பெயரிடப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் மெல்பேர்னில் அடையாளம் காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு மெல்பேர்ன் கொத்தணியில் பாதிக்கப்பட்ட இருவரின் மரபணுக்களை ஆராய்ந்த வேளை இந்த புதிய வைரசினை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அடையாளம் காணப்பட்ட நான்கு நோயாளிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இந்த வகை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலையிலேயே கொரோனா வைரஸ் பரவல் நிகழ்ந்துள்ளது.
இந்த குடும்பத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவனிற்கு சக மாணவன் ஒருவனிடமிருந்து கொரோனா வைரஸ் பரவியது.
நியுசவுத்வேல்ஸின் ஜேர்விஸ் பேயிலிருந்து திரும்பிய குடும்பத்தை சேர்ந்த மாணவன் மூலமே மற்றைய மாணவனிற்கு வைரஸ் பரவியுள்ளது.
இந்த கொத்தணியில் இதுவரை ஏழு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதிய வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.