உலக வாழ் இந்துக்களால் ஆயுத பூஜை வழிபாடுகள் அனுஸ்டிப்பு
இந்துக்களின் முக்கிய விரதங்களின் ஒன்றான நவராத்திரி கால ஆயுத பூஜை வழிபாடுகள் உலகவாழ் இந்துகளால் இன்று சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மைய நாட்களில் பொருட்களின் சடுதியான விலை அதிகரிப்புக்கு மத்தியில் உணவுப் வறிய மக்களும் உணவுப் பண்டங்களை செய்து சிரமத்திற்கு மத்தியில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்துகளின் முக்கிய விரதங்களின் ஒன்றான நவராத்திரி, புரட்டாசி மாதத்தின் வளர்பிறை நாளான கடந்த வியாழக்கிழமை 07 ஆம் திகதி சித்திரை நட்சத்திரத்தில் ஆரம்பித்தது.
இந்த முறை சதுர்த்தி மற்றும் பஞ்சமி திதி ஆகியன ஒரே தினத்தில் வருவதால் இந்த முறை 8 நாட்களுக்கு மட்டுமே நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன்படி இன்று வியாழக்கிழமை ஆயுத பூஜை வழிபாடுகள் உலக வாழ் இந்து மக்களால் ஆலயங்களிலும் வீடுகளிலும் பூசைகளும் வழிபாடுகளும் சிறப்பாக இடம்பெற்றுள்ளளன.
நவாராத்திரியின் முக்கிய நாளான விஜயதசமி நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.