மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கடற்றொழிலாளர்...!

Tamils Batticaloa Sri Lanka Navy Sri Lanka Fisherman Law and Order
By Bavan Apr 08, 2026 01:34 PM GMT
Report

மட்டக்களப்பில் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையைப் பாவித்துக் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று (08-04-2026) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியான அவசர எச்சரிக்கை...!

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியான அவசர எச்சரிக்கை...!

கடற்றொழில் நடவடிக்கை

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) காலையில் செட்டிபாளையம் கடலில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்றொழிலாளர் நந்தீசன், அனுமதியற்ற மீன்பிடி வலைக்குப் பாவிக்கும் ஈயத் துண்டுகளை வைத்துக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இடத்திற்குச் சிவில் உடையில் சென்ற கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கடற்றொழிலாளர்...! | Navy Torture Batticaloa Fisherman Human Rights

இதன்போது கடற்றொழிலாளர், நான் அனுமதியற்ற மீன்பிடி வலையான சுருக்குவலை பாவித்துப் மீன்பிடிக்கும் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் எனக் கூறி அங்கிருந்த வலையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த கடற்றொழிலாளரைப் பிடித்து இரண்டு மணித்தியாலம் முழங்காலில் இருக்க வைத்து அடித்துத் தாக்கியுள்ளனர்.

போர்நிறுத்த வெற்றி...! ட்ரம்ப்புக்கும் தெஹ்ரானுக்கும் இடையே அடுத்த போட்டி

போர்நிறுத்த வெற்றி...! ட்ரம்ப்புக்கும் தெஹ்ரானுக்கும் இடையே அடுத்த போட்டி

தகாத வார்த்தை

இதன்போது அவர், நான் ஒரு சர்க்கரை வியாதி நோயாளி, அதற்கான குளிகையைப் போடுவதற்கு விடுமாறு கோரியும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்காது அவரை இரண்டு மணித்தியாலம் முழங்காலில் வைத்துள்ளனர்.

இதனை அறிந்த அவரது மனைவி அங்கு சென்று தனது கணவரை முழங்காலில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்வதைக் கண்டு உடன் அதனைத் தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் மற்றும் காணொளிப் பதிவைச் செய்துள்ளார்.

மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கடற்றொழிலாளர்...! | Navy Torture Batticaloa Fisherman Human Rights

இதனைக் கண்ட கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசியைப் பறித்து அவர் காணொளி செய்த காட்சிகளை அழித்ததுடன் அவருக்குத் தகாத வார்த்தைகளால் பேசியும் அவரைக் கைது செய்யப்போவதாக மிரட்டி அவரைத் தாக்க முற்பட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முழங்காலில் வைத்திருந்த கடற்றொழிலாளரைக் களுதாவளை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்திருந்த பின்னர், மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர் காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு முன்திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு முன்திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை

புலனாய்வுப் பிரிவி

இந்தநிலையில், கடற்படைப் புலனாய்வுப் பிரிவினரின் தாக்குதலுக்கு உள்ளான கடற்றொழிலாளர் மிகவும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தன்னை முழங்காலில் வைத்திருந்த காட்சியைத் தனது பிள்ளைகள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்திருந்ததாகவும் அதனால் மிகவும் வேதனையடைந்துள்ளதுடன் அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளைகள் அவமானத்தால் பாடசாலைக்குச் செல்ல முடியாது என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கடற்றொழிலாளர்...! | Navy Torture Batticaloa Fisherman Human Rights

நான் மட்டும் இந்தச் சுருக்குவலை பாவித்துப் மீன்பிடிக்கவில்லை, சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தச் சுருக்குவலை பாவித்துப் மீன்பிடித்து வருகின்ற நிலையில் என்னை மட்டும் கைது செய்தது மட்டுமல்லாது முழங்காலில் இருக்க வைத்து அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர் எனக்கு நீதி வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தத்துக்கு மத்தியில் குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

போர் நிறுத்தத்துக்கு மத்தியில் குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026