நீர்கொழும்பு சிறைச்சாலையில் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்ட கைதிகள்...! சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தமது பிள்ளைகள் எந்தவித குற்றச்செயலில் ஈடுபடாத போதும் வலுக்கட்டாயமாக பிடித்து வந்து அடைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் இரண்டு தினங்களாக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
இதில் பாதிக்கப்பட்ட சிறை கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களே இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கைதியின் தாய்
அத்தோடு கைதிகளின் குடும்பத்தினர் சிறைச்சாலையின் முன் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் எனது மகனின் முகத்தைப் பார்க்க அனுமதியுங்கள் என அங்கு வந்த கைதியின் தாய் ஒருவர் கதறியழுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகனுக்கு என்ன ஆனது என நான் பார்க்க வேண்டும் எனவும் சாதாரணமாக வீட்டில் இருந்த மகனை தூக்கி வந்து சிறையில் அடைத்து விட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இங்கே இருக்கும் அனைத்து இளைஞர்களும் போதைப்பொருள் பாவிப்பவர்கள் அல்ல அப்பாவிப் பிள்ளைகளுக்கு இந்த அநீதியைச் செய்யாதீர்கள் எனவும் அவர் கதறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |