நீர்கொழும்பு சிறை கலவரம்! 20 அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு
நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலில் 32 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தலைமை சிறை அதிகாரி மற்றும் சிறை அதிகாரிகள் உட்பட 20 பேரை அடையாள அணிவகுப்பில் முன்னிலையாகுமாறு நீர்கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலை கலவரம் தொடர்பான வழக்கு, நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த 20 நபர்களும் அடையாள அணிவகுப்பிற்காக செப்டம்பர் 8 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) முந்தைய விசாரணையின் போது இந்த வழக்கு தொடர்பாக 70 சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட்டிருந்தது.

இந்த சம்பவத்தின் முதல் 6 சந்தேகநபர்களுக்கு, இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருந்தனர்.
இருப்பினும், உடல்நலக் காரணங்கள் மற்றும் மற்றொரு நீதிமன்ற நடவடிக்கை காரணமாக சந்தேக நபர்களில் இருவர் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
இதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அடையாள அணிவகுப்பிற்காக நான்கு சந்தேக நபர்களையும் நான்கு சாட்சிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள கூற்றின்படி, அணிவகுப்பின்போது நான்கு சாட்சிகளும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
YOU MAY LIKE THIS
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |