புதிய கொவிட் - 19 திரிபு : மீண்டும் அதிகரித்த பிசிஆர் பரிசோதனைகள்
உலகளாவிய ரீதியில் புதிய கொரோனா - 19 (COVID-19) திரிபால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் சில வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனைகளை சுகாதார அமைச்சு (Ministry of Health) அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகள் தற்போது கொரோனா - 19 நோயாளிகளைக் கண்டறிய எச்சரிக்கையுடன் செயற்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க (Anil Jasinghe) தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சை பெறும் நோயாளிகள்
அத்துடன் காய்ச்சல் தொடர்பில் அனுமதிக்கப்படும், சிகிச்சை பெறும் நோயாளிகளின் கண்காணிப்பை அதிகரிக்க வைத்தியசாலைகளுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், இலங்கை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் எனவும், ஆனால் உடனடியாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது எனவும் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
