பிரித்தானிய வேலைவாய்ப்புகளுக்காக காத்திருப்போருக்கு பேரிடி
பிரித்தானிய அரசு, புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 22ஆம் திகதி முதல் புதிய விதிகளை நடைமுறைக்கு கொண்டுவருகிறது.
அதன்படி, திறன் வாய்ந்த வேலை தேடுபவர்கள் (Skilled Workers) குறைந்தபட்ச ஆண்டு வருமான வரம்பு £38,700 இலிருந்து £41,700 ஆக உயர்த்தப்படுகிறது.
111 வகையான வேலைகளுக்கு பாதிப்பு
இந்த வரம்பு உயர்வின் விளைவாக, 111 வகையான வேலைகளை செய்யும் வெளிநாட்டவர்கள் இனி பிரித்தானியாவில் பணியாற்ற முடியாத நிலை உருவாகும்.
நல பணியாளர்கள் (care workers) இனி வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு எடுக்கப்படமாட்டார்கள்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள், பட்டப்படிப்பு படிக்காத சில தொழில்களுக்குச் சேர்ந்தவர்கள், தங்களின் குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவிற்கு அழைத்து வர முடியாது.
புதிய மாற்றங்கள்
அத்துடன், ஆண்டின் இறுதியில், மொழித்தகுதி, ஊக்கச் சான்றிதழ்கள் (Certificates of Sponsorship - CoS) மற்றும் குடும்ப விசா நிபந்தனைகள் தொடர்பிலும் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த புதிய நடவடிக்கைகள், நாட்டு உள்நாட்டு வேலை வாய்ப்புகளை பாதுகாக்கவும், மக்கள் வரப்போக்கை கட்டுப்படுத்தவும் பிரித்தானிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

