இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்துக்கான யாழ்.மாவட்ட பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம் தெரிவு!
இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளததின் யாழ் மாவட்டத்திற்கான பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் யாழ் கிரீன் கிராஸ் விருந்தினர் விடுதியில் இன்று காலை இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் பிரதீப் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
மாநகரசபை
யாழ். மாவட்டத்தின் 17 உள்ளூராட்சி மன்றங்களின் 50 இற்கும்.மேற்பட்ட பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்ட குறித்த கூட்டத்தின் போது புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது.
புதிய நிர்வாகத்தின் தலைவராக:வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்தும் உப தலைவராக யாழ் மாநகரசபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தெரிவு செய்யப்பட்டனர்.
செயலாளராக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கௌசலா சிவாவும், உப செயலாளராக, சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் பௌலினா சுபோதினியும் தயாளராசாவும், பொருளாளராக வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தன் துவாரகாதேவியும் தெரிவுசெய்யப்பட்டனர்.
