நாட்டில் புதிதாக உருவாக்கபடவுள்ள அரசியல் கூட்டமைப்பு: டலஸ் அழகப்பெரும வெளியிட்ட தகவல்
இலங்கையில் இனிவரும் காலங்களில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய தலைவர்கள் இன்றிய ஒரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விரிவான ஓர் அரசியல் கூட்டணி
எதிர்க்கட்சிகளுக்கு இடையில் விரிவான ஓர் அரசியல் கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளை தாம் வரவேற்பதாகவும் அவற்றுக்கு ஆதரவளிப்பதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை,அந்த அரசியல் கூட்டணி விரிவான ஓர் அரசியல் கூட்டணியாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
