நாளைமுதல் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள புதிய பொறுப்பு
police
Dilum Amunugama
safety
Railway passengers
By Sumithiran
புகையிரத நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் புகையிரத நிலைய பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்த தகவலை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, புகையிரத நிலையங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு, நாளை முதல் காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டுள்ளார்.