கனடாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்
அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான பாதுகாப்பு மற்றும் இரு நாட்டு உறவுகளில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
கனடாவுக்கான அமெரிக்க தூதுவர் பீட் ஹூக்ஸ்ட்ரா, “கனடா F-35 போர் விமானங்களை வாங்க மறுத்தால், அமெரிக்கா தனது போர் விமானங்களை கனடாவின் வான்வெளியில் இயக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று கூறியதை தொடர்ந்து இந்த பதற்றம் உருவாகியுள்ளது.
கனடா 2023-இல் 88 F-35 விமானங்களை வாங்க 19 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
கனடாவின் முடிவு
இதில் 16 விமானங்களுக்கு பணம் செலுத்தப்பட்டு, 2026-இல் வழங்கப்படவிருந்தது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரி அச்சுறுத்தல்களுக்கு பின்னர், கனடா இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது.

இதனால், கனடா 72 Gripen E போர் விமானங்கள் மற்றும் 6 GlobalEye கண்காணிப்பு விமானங்களை ஸ்வீடனின் Saab நிறுவனத்திலிருந்து வாங்கும் வாய்ப்பையும் ஆராயவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |