வெனிசுலா எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடு!
வெனிசுலாவில் கச்சா எண்ணெய் கட்டமைப்பை நவீனமாக்க அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை ட்ரம்ப் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் கிரிஸ் ரைட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து கருத்தரங்கு ஒன்றில் பேசிய அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிரிஸ் ரைட் கூறும்போது,
``வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான தடை படிப்படியாக நீக்கப்படும்.
மீண்டும் விற்கப் போகிறோம்
வெனிசுலா கச்சா எண்ணெயை மீண்டும் விற்கப் போகிறோம். இந்த வருமானத்தை வெனிசுலா கணக்கில் வரவு வைக்ப்படும்.

இந்தப் பணம் வெனிசுலா மக்களுக்காக பயன்படுத்தப்படும். 2000ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் எக்ஸான் மொபில் கார்பரேஷன், கோனோகோபிலிப்ஸ் மற்றும் கம்பெனிகளை வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் அரசுடைமை ஆக்கினார்.
அந்த நிறுவனங்களுக்கு எல்லாம் இழப்பீடு அளிக்க வேண்டியுள்ளது. வெனிசுலா எண்ணெய் விற்பனை மூலம் முதலில் கிடைக்கும் பணம், அமெரிக்க நிறுவனங்களுக்கு திருப்பி கொடுக்க பயன்படுத்தப்படாது. அது நீண்ட கால பிரச்சினை” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 11 மணி நேரம் முன்