சிறிலங்காவின் புதிய அதிபராக சஜித்துக்கு வாய்ப்பு
நாட்டின் அடுத்த சிறிலங்கா அதிபராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த சிறிலங்கா அதிபராக சஜித் நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அரச அதிபர் பதவிக்கு வேறு எந்த கட்சியும் யாரையும் முன்னிறுத்தவில்லை எனவும் அரச அதிபர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாக்கெடுப்புக்கு செல்லாமலேயே சஜித் பிரேமதாசவை அரச அதிபராக நியமிப்பதற்கான இந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,