கொழும்பில் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
கொழும்பு - கல்கிசையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
கல்கிசை - ஹுலுடகொட வீதியில் இன்று(15.08.2026) குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
முன்னதாக, கல்கிசை, ஹுலுடகொட வீதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹுலுடகொட வீதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள், இன்று இரவு சுமார் 9.50 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் ராகமவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |