வற்றாப்பளை கண்ணகை அம்மன் உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை
முல்லைத்தீவில் இதுவரை 16 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வற்றாப்பளை கண்ணகை அம்மன் உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொது மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போதைய கோவிட் 19 நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த காலங்களில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்திருந்தாலும் தற்போது அதிகரித்து வருகின்றது.
எனவே மக்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்ளவும்.
இந்நிலையில் எதிர்வரும் கிழமைகளில் நடைபெறவுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொள்வதை தவிர்த்து கொள்ளுமாறும் ஆலய நிர்வாகத்தினரால் கிரிகைகள் மட்டும் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.