நீர்கொழும்பு சிறைக் கலவரம் : நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு தீர்மானித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தமது கடமையையும், பொறுப்பையும் அவர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்தே, இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது.
அதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று (10) நாடாளுமன்றத்தில் வைத்து குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
28 பேர் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5, 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் உட்பட 28 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் தற்போது ஒரு "குற்றப் பிரதேசம்" என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |