பிள்ளையான் சிஐடியில் 7 மணிநேர வாக்குமூலம் - வெளியிட்ட தகவல்

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Sivanesathurai Santhirakanthan Channel 4
By Sathangani Nov 23, 2024 06:07 AM GMT
Report

எனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் (Pillayan) எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்தார்.

நேற்று (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளிப்பதற்காக முன்னிலையானபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ”சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் அருட் தந்தையொருவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே சிஐடியில் (CID)  முன்னிலையாகுமாறு எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சர்களின் உகண்டா பண விவகாரம்: அநுர அரசுக்கு நாமல் கூறவந்த செய்தி

ராஜபக்சர்களின் உகண்டா பண விவகாரம்: அநுர அரசுக்கு நாமல் கூறவந்த செய்தி

கோட்டாபயவை ஆட்சியில் அமர்த்துவதற்கு 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) ஆட்சியில் அமர்த்துவதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அஸாத் மௌலானா (Asad Maulana) குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையான் சிஐடியில் 7 மணிநேர வாக்குமூலம் - வெளியிட்ட தகவல் | No Connection Between Easter Attack And Pillaiyan

உண்மையில் 2015 இல் நல்லாட்சி அராசங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் 2018இல் நடத்தப்பட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவே (SLPP) வெற்றி பெற்றது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் 2019ஆம் ஆண்டு தான் மேற்கொள்ளப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்தை 2018ஆம் ஆண்டே மக்கள் புறக்கணித்து விட்டனர்.

அந்த வகையில் 2018இல் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக யாரை நியமித்திருந்தாலும் அவர் வெற்றி பெற்றிருப்பார். மக்களின் மனநிலை அவ்வாறு தான் காணப்பட்டது.

தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு

தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இதனை தொடர்புபடுத்துவது அடிப்படையற்றது. எனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

பிள்ளையான் சிஐடியில் 7 மணிநேர வாக்குமூலம் - வெளியிட்ட தகவல் | No Connection Between Easter Attack And Pillaiyan

எனவே யாரையாவது மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்கள் செயற்படக் கூடாது. எனக்கு எந்த பயமும் இல்லை. பழிவாங்கல் நோக்கத்துடனேயே என்னை விசாரணைக்கு அழைக்கின்றனர்.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்றவர்களிடம் கேட்க விடயங்களை என்னிடம் கேட்கக் கூடாது. அவ்வாறில்லை என்றால் இது தொடர்பில் ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும்.

புலனாய்வுப்பிரிவினர் ஜனாதிபதியின் கண்களைப் போன்று இருக்க வேண்டும். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தால் எம்மால் எதுவும் செய்ய முடியாது. சிறைச்சாலையிலிருந்து கொண்டு இவ்வாறானதொரு சதித்திட்டத்தை திட்டமிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை“ என தெரிவித்தார்.

சுமந்திரனை தோற்கடித்த தமிழ் மக்கள் : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு

சுமந்திரனை தோற்கடித்த தமிழ் மக்கள் : முன்னாள் எம்.பி சுட்டிக்காட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016