அரசாங்கம் ஆணவத்தில் உள்ளது! மக்களை காப்பாற்றும் எண்ணம் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்ட தகவல்

Srilanka Sajith Premadasa Mano Ganesan Ameer Ali Rauff Hakeem
By Chanakyan Aug 18, 2021 05:48 AM GMT
Report

ஆணவம், அதிகாரத்தில் உள்ளமையால் உண்மையைப் புரிந்துகொள்ளாமை மற்றும் திறமையின்மை ஆகியவை இன்று அரசாங்கத்தின் மூன்று தூண்களாக மாறிவிட்டன. இந்த நேரத்தில் ஏற்படும் ஒவ்வொரு உயிர்ச்சேதத்திற்கும் அரசாங்கமே பொறுப்பு என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாதளவில் பரவி வருகிறது. இந்த நேரத்தில் அரசாங்கம் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் புறக்கணிப்பது ஒரு சோகமான நிலையாகும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமீர் அலி ஆகியோர் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ள விடயம்,

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் சர்வதேச மற்றும் தேசிய மருத்துவர்கள், இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டை உடனடியாக அறிவியல் ரீதியாக முடக்குதலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் இந்த அறிவுறுத்தல்களைக் பொருட்ப்படுத்தாமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயல்படுவதாகத் தெரிகிறது.

இந்த நேரத்தில், நியூசிலாந்து பிரதமர் டெல்டாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை அடையாளம் காணும் போது நாட்டை மூடி உடனடியாக நடவடிக்கை எடுப்பது ஒரு முன்னுதாரணம் அன்றி ஒரு இலட்சியமான செயற்பாடாகும்.

டெல்டா வைரஸின் மூன்று பிறழ்வுகள் இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமண நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அவசர காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கொவிட் ஒழிப்பு செயலணியின் பிரதானி இராணுவத் தளபதியால் கூட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருபுறம், அரசாங்கம் வைரஸின் பிறழ்வு விகாரங்கள் பரவுவதைப் பற்றி பேசுவதோடு மறுபுறம் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறது.

அவ்வாறே நாடு முடக்குதலை மேற்கொள்ளாது என்றும் கூறுகிறது. இந்த நான்கு காது கேளாத கதைகளின் அர்த்தம் என்ன? கொரோனா கட்டுப்படுத்தல் சார்ந்த விடயங்களை தனது அரசியல் நிகழ்ச்சி நிரலின்பால் தொடர்ச்சியாக முடிவுகளை எடுத்த அரசாங்கம், இன்று மக்களின் உயிர்களைக் கொன்று கொண்டே இருக்கிறது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மக்களின் வாழ்க்கையை கடவுளிடம் ஒப்படைக்க அரசாங்கம் முன்மொழிகிறது. இதைக் கூறியது அரசாங்க அமைச்சரவையின் ஊடக பேச்சாளர்களில் ஒருவரே.

எனவே, இதை ஒரு எளிய அறிக்கையாக நிராகரித்து விட முடியாது. அரசாங்கத்தின் முந்தைய நடவடிக்கைகள் புராண சித்தாந்தத்தில் கொரோனா பரவல் நோயைக் குணப்படுத்த முயன்றது என்பது இரகசியமல்ல.

முட்டிகளை கீழே போடுதல், காளி பானம் மற்றும் ரிதிகல பானம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் யதார்த்தமான உதாரணங்களாகும்.வேறு வழியின்றியே சாதாரண மக்கள் உதவிக்காக கடவுளிடம் திரும்புகிறார்கள்.

அரசாங்க ஊடகப் பேச்சாளர் கடவுளிடம் மக்களை ஒப்படைப்பதன் கருத்தின் மூலம், இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதுவே தெளிவாகிறது.

நாட்டு மக்கள் தாமாகவே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுவே அரசாங்கத்தின் எண்ணமாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் சரிந்து விட்டதால், சர்வதேச அரங்கில் நம்பிக்கை முறிந்து விட்டதாலும் நாட்டை முடக்கி வைத்து விட்டு மக்களுக்கு ஆதரவளிக்க முடியாத அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

நாடு முடக்கப்பட்டால் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருளாதார ஆற்றல் அரசாங்கத்திற்கு இல்லை என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறிய அறிக்கையால் இது உறுதி செய்யப்படுகிறது.

அரசாங்கம் இப்போது என்ன செய்கிறது? பொது ஊழியர்களை வேலைக்கு அழைப்பது, பகுத்தறிவற்ற பயணக் கட்டுப்பாடுகள், ஊடக வெளியீடுகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்ற அபத்தமான செயல்களில் ஈடுபட்ட வன்னம் நாட்டு மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறது.

நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்கங்களை எட்டும் போது தினசரி இறப்பு எண்ணிக்கை மூன்று இலக்கமாக உயரும் போது மனிதப்படுகொலையில் ஈடுபடுவதன் மூலம் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காகவா நாடு மூடப்படாதுள்ளது என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.

ஆணவம், அதிகாரத்தில் உள்ளமையால் உண்மையைப் புரிந்துகொள்ளாமை மற்றும் திறமையின்மை ஆகியவை இன்று அரசாங்கத்தின் மூன்று தூண்களாக மாறிவிட்டன. இந்த நேரத்தில் ஏற்படும் ஒவ்வொரு உயிர்ச்சேதத்திற்கும் அரசாங்கமே பொறுப்பு.

இந்த முக்கியமான நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களை மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் சுயமாக முடங்கிக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றன.

குறைந்த பட்சம் தீர்மானமிக்க அடுத்த பத்து நாட்களுக்காவது அதன் செயல்பாட்டிற்கு பங்களிக்குமாறு வேண்டுகிறோம்.

ஏனென்றால், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான திட்டங்கள் அல்லது தேவைகள் அரசாங்கத்திடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்பதலாகும் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020