அநுர ஆட்சியில் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka NPP Government
By Kajinthan Feb 01, 2026 10:26 AM GMT
Report

கடந்த ஆட்சிக் காலங்களில் ஏதோ ஒரு வகையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் இதுவரை எந்த ஒரு அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

நேற்று (31) மாலை யாழ். சிவகுரு ஆதீனத்தில் முன்னெடுக்கப்பட்ட "நீதிக்கான சாட்சி" என்ற நூதனப் போராட்டத்தில் கலந்து கொண்டு சாட்சி உரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் பேரிலே இன்றும் அரசியல் கைதிகள் சிறைகளில் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

கொட்டும் மழையிலும் யாழ். தையிட்டியில் வெடித்த போராட்டம்

கொட்டும் மழையிலும் யாழ். தையிட்டியில் வெடித்த போராட்டம்

அரசியல் கைதிகளின் துயர வாழ்க்கை 

30 வருடங்களை கழிந்து 31வது வருடத்தில் அரசியல் கைதிகளின் துயர வாழ்க்கை ஆரம்பிக்கிறது. இன்னமும் பத்து அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுகின்றனர்.

அவர்களில் சிவகுமார் பார்த்திபன் என்பவர் 30 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். அரசியல் கைதிகளின் ஆயுள்கள் குறைவடைந்து செல்கின்றன.

அநுர ஆட்சியில் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை : எழுந்துள்ள குற்றச்சாட்டு | No Political Prisoner Was Released In Anura S Rule

30 ஆண்டுகள் என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அரைவாசி காலம். மீதி காலத்திலாவது அவர்கள் தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த வலிகளை அனுபவித்ததில் நானும் ஒருவன் என்ற வகையில் இந்த பொறுப்பான கடமைகளை செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகின்றோம். அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுத்து அரசியல் கைதிகளின் விடுதலை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்பவர்களை ஒரு பயங்கரவாதிகள் போல் பார்த்து இந்த அரசு நடத்துகின்ற நிலை காணப்படுகின்றது.

இனப் பிரச்சினையின் விளைவாகத்தான் போர் ஏற்பட்டது அந்தப் போராட்டத்தின் விளைவாக தான் அவர்கள் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

ரணில் மீதான விசாரணை குறித்து ஆனந்த விஜேபாலவின் அதிரடி அறிவிப்பு

ரணில் மீதான விசாரணை குறித்து ஆனந்த விஜேபாலவின் அதிரடி அறிவிப்பு

இலங்கை - இந்தியா ஒப்பந்தம்

கடந்த ஆட்சி காலங்களில் அரசியல் கைதிகள் ஏதோ ஒரு பொறிமுறையில் விடுதலை செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள். இலங்கை - இந்தியா ஒப்பந்தம் தொடக்கம் சமாதான காலம் வரை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டும், பரிமாறப்பட்டு கொண்டும் இருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில், நீதிமன்றங்களில் வழக்கு காணப்பட்டபோது கூட இரவோடு இரவாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் தற்போது இருக்கின்ற அரசாங்கம் வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் ஒரு அரசியல் கைதியை கூட இதுவரை விடுதலை செய்யவில்லை.

அநுர ஆட்சியில் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை : எழுந்துள்ள குற்றச்சாட்டு | No Political Prisoner Was Released In Anura S Rule

நாங்கள் கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் ஆகியோருக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதைவிட நீதி அமைச்சரை நேரில் கூட சந்தித்திருந்தோம்.

தற்போதுள்ள அரசாங்கமானது அடக்கு முறைக்கு எதிராக இரண்டு தடவை ஆயுதம் தூக்கி போராடியது. இவர்களிலும் கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் இருந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதிகளாக இருந்தார்கள்.

ஆனால் இது ஒரு பொறிமுறை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் இன்று ஆட்சியில் இருக்கின்றார்கள். வலியை உணர்ந்தவர்கள் வழிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இருந்தன. ஆனால் இன்று வரை அது தொடர்பான எந்த விதமான சமிக்ஞைகளும் தென்படவில்லை.

விடுதலைப் போர் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவர்களை சிறையில் வைத்திருப்பதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை நமது வலுவான கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம்.” என தெரிவித்தார்.

துறவறம் பூணுகிறார் கோட்டாபயராஜபக்ச...!

துறவறம் பூணுகிறார் கோட்டாபயராஜபக்ச...!

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி