நாட்டில் எரிபொருள் இருப்பு தொடர்பில் அமைச்சர் கஞ்சன வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் எவ்வித எரிபொருட்களிலும் தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 95 பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்தியை தொடர்ந்தே தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிவாயு நிரப்பு நிலையங்களில் 95 பெற்றோல் உட்பட வேறு எந்த பெற்றோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.
தேவை
மேலும், நாட்டின் நாளாந்த 95 பெற்றோலின் தேவை 80 - 100 தொன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், எரிபொருள் நிலையங்களில் போதுமான அளவு இருப்புக்கள் உள்ளதாகவும், தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 9000 மெட்ரிக் தொன் பெற்றோலுடன் கூடிய அடுத்த கப்பல் எதிர்வரும் ஜீன் 22 ஆம் திகதி வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
There is no shortage of Petrol 95 stocks or any other petroleum products with CPC & LIOC. Daily requirement of Petrol 95 is about 80-100 MT islandwide. There’s adequate stocks available with fuel stations & all orders placed will be distributed. The next cargo of 9000 MT of… pic.twitter.com/RAl9qOQ2Zc
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 18, 2023
