கதிரைக்கு அடிபடும் தமிழ் தேசியம் - யார் சுத்துமாத்து...! கஜேந்திரகுமாருக்கு என்ன தகுதி
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (EPDP) அலுவலகத்திற்கு தேடிச் சென்று தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆதரவு கேட்ட விடயத்தை பற்றிப் பேசுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு (Gajendrakumar Ponnambalam) தகுதி உள்ளதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தமது சுய அரசியல் இலாபத்திற்காக தமிழ் தேசிய கொள்கையை கைவிட்டு விட்டார்கள் என்றும் சிலரை சுத்துமாத்து என முத்திரை குத்தியவர்கள் இன்று தாமும் அந்த சுத்துமாத்து அரசியல் ஈடுபடுவதையும் காண முடிகிறது.
கதிரைகளை தக்க வைப்பதற்காக இன்று எதிரிகளுடன் கூட கை கோர்க்க தயாராக உள்ளமை மக்கள் மத்தியில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையை தகர்த்துள்ளதாக தவத்திரு வேலன் சுவாமிகள் அடிகளார் தெரிவித்துள்ளார்.
வடக்கு அரசியல் பரப்பில் அண்மைக்காலமாக ரகசிய மற்றும் வெளிப்படை என்று கூறிக்கொண்டு நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தவத்திரு வேலன் சுவாமிகள் அடிகளார் ஐபிசி தமிழ் களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        