யாழில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் தூங்கி வழிந்த வடக்கு கல்வி அதிகாரிகள்!
யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் ஹரிணி அமர சூரிய வடக்கு மாகாண கல்வியை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தியவேளை வடக்கு கல்வி அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு மாகாணம் பின் தள்ளப்பட்டமை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கைதடியில்அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் சில கல்வி உயர் அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் பிரதமர் வடக்கு கல்வி நிலை பின்னோக்கி செல்வதற்கு அதிகாரிகளின் அசம்பந்தப் போக்கே காரணம் என குறிப்பிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகளின் பொறுப்பற்ற இந்த செயலை வெளியில் சொன்னாலும் குற்றம் என அங்கலாய்க்கின்றனர் கீழ் மட்ட அதிகாரிகள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


