வட மாகாண கடற்றொழிலாளர்கள் கொந்தளிப்பு! எல்லை தாண்டும் இந்தியப் படகுகளால் ஆபத்து
வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று (03-06-2026) ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
இதில் வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
இந்த ஊடக சந்திப்பில் இணையத்தின் பிரதிநிதிகளான அன்னலிங்கம், அன்னராசா, நாகராசா மற்றும் வர்ணகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக கடல் அட்டைத் தொழில் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள், இந்திய கடற்ழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மேற்கொள்ளும் கடற்றொழில் நடவடிக்கைகளால் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தொழில் முறைகளால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி மற்றும் நிரந்தரமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |